Mar 21, 2026
Thisaigal NewsYouTube
வெப்ப தாக்குதல் பக்கவாதத்தில் 10 பேர் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

வெப்ப தாக்குதல் பக்கவாதத்தில் 10 பேர் பாதிப்பு

Share:

திரெங்கானு, மே 15-

திரெங்கானுவில் கடந்த ஏப்ரல் மாதம் வரையில் மொத்தம் 10 பேர் வெப்ப தாக்குதல் பக்கவாதத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் இதில் பாதிப்படைந்துள்ளனர்.

மாநிலத்திலுள்ள சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் இந்நோயால் பாதிப்படைந்திருப்பது கண்டறியப்பட்டதாக திரெங்கானு மாநில சுகாதாரத்துறையின் இயக்குநர் டத்தோ டாக்டர். காசெமனி எம்போங் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் அதிகமான நேரங்களில் வெயிலில் வேலை செய்வதை அடுத்து அவர்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக காசெமனி எம்போங் கூறினார்.

தலைசுற்றல், குமட்டல்,வாந்தி போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதுடன் இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று காசெமனி எம்போங் வலியுறுத்தினார்.

உடலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமானால் நோயாளிகள் உடலில் நீரை இழக்க நேரிடுவதுடன் தசைப்பிடிப்பு, வெப்ப சோர்வு, வெப்ப தாக்குதல் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக காசெமனி எம்போங் எச்சரித்தார்.

இந்த வெப்ப தாக்குதல் பக்கவாதம் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிக ஆபத்தான ஒன்று காரணம் இது மரணத்திற்கு வழிவகுக்கக்கூடிய ஒன்றாகும் என்று அவர் மேலும் அறிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து