கோத்தாபாரு, நவ.6-
கடந்த வெள்ளிக்கிழமை கிளந்தான் மாநிலத்தில் குறைந்தது 20 கடை கொள்ளைகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு முன்னாள் கைதிகள் கம்போங் பாங், பெங்காலான் சீபாவில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஏப்ரலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 33 மற்றும் 34 வயதுடைய இருவரும் தும்பாட், பாசிர் மாஸ் மற்றும் ஜெலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப் படுவதாகக் கிளந்தான் போலீஸ் தலைவர் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட் கூறினார்.
இவர்களின் செயல் முறை இரவு நேரங்களில் கொள்ளையடிப்பதும், மின்சார ரம்பங்கள்,இயந்திரங்களை பயன்படுத்தி கடைகளுக்குள் புகுந்து திருடுவது ஆகும் என்று அவர் விவரித்தார்.








