தாமான் மெலாவிஸ் வடிகால் மேம்பாடு, வெள்ளத் தடுப்புத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என்று பாண்டமாறன் சட்டமன்ற உறுப்பினர் லியோங் தக் சீ தெரிவித்தார்.
2 கோடி வெள்ளி மதிப்பிலான இந்தத் திட்டம் மாநில சட்டமன்ற பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பிரச்சினை தொடர்பான குடியிருப்பாளர்களின் கவலையைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டதாகும்.
எவ்வாறாயினும், வடிகால் அமைப்பிற்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வடிகால்களில் குப்பைகளை வீசாமல் தூய்மையைப் பராமரிக்குமாறு லியோங் தக் சீ குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.








