Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி மாணவர் உட்பட 11 பேர் சோதனையில் கைது!
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர் உட்பட 11 பேர் சோதனையில் கைது!

Share:

ஈப்போ, டிசம்பர்.07-

ஈப்போ Station 18-இல் நடந்த அதிரடிச் சோதனையில், பள்ளி மாணவர்கள் உட்பட பல இளைஞர்கள் சாலைச் சண்டையாளர்களும் சட்டத்திற்குப் புறம்பான மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பேரா மாநிலக் காவற்படை, சாலைப் போக்குவரத்துத் துறை, சுற்றுச் சூழல் துறை, தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் ஆகியவையால் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில், 335 பேர் சோதனையிடப்பட்டனர். அவர்களில் 15 வயது முதல் 42 வயதுக்குட்பட்டவர்கள் அடங்குவர். 30 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, 16 வயது பள்ளி மாணவன் உட்பட 11 பேருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் போதைப் பொருள் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சாலையில் விபத்துகளையும் குற்றங்களையும் குறைப்பதற்காகப் பேரா மாநிலக் காவற்படையின் ஒருங்கிணைந்த இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று அதன் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்