Aug 10, 2026
Thisaigal NewsYouTube
வீடுகளுக்குத் திரும்ப புத்ரா ஹைட்ஸ் உரிமையாளர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுவர்
தற்போதைய செய்திகள்

வீடுகளுக்குத் திரும்ப புத்ரா ஹைட்ஸ் உரிமையாளர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுவர்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இன்று வியாழக்கிழமை காலை முதல் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படாது. மாறாக, கட்டம் கட்டமாகச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று பெட்டாலிங் மாவட்ட அதிகாரி ஹுஸுனுல் கைடில் முகமட் தெரிவித்தார்.

115 வீட்டு உரிமையாளர்களில் 41 குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முதலில் அனுமதிக்கப்படுவர். இவர்கள் அனைவரும் ஜாலான் 1/3A பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று காலை 9.30 மணி முதல் அவர்கள் தங்கள் குடியிருப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வீடுகளின் மின்சாரக் கம்பிகளின் இணைப்பில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று உறுதிச் செய்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு மின்சார இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி