கோத்தா கினபாலு, ஜூன்.23-
ஆம்புலன்ஸ் வண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் மருத்துவரும், தாதியரும் காயத்திற்கு ஆளாகினர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலையில் சபா, கோத்தா கினபாலு, ஜாலான் சாலிட், செபங்காரில் நிகழ்ந்தது.
அதிகாலை 1.50 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் மருத்துவரும், தாதியரும் சொற்பக் காயங்களுக்கு ஆளாகியதாக கோத்தா கினபாலு தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தினர் தெரிவித்தனர்.
அந்த ஆம்புலன்ஸில் மொத்தம் 3 பணியாளர்கள் இருந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர், காயமின்றி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.








