Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அரசு வாகனத்தின் கண்ணாடிகள் உடைப்பு! மர்ம ஆசாமியை சிசிடிவி மூலம் பிடித்த காவற்படை!
தற்போதைய செய்திகள்

அரசு வாகனத்தின் கண்ணாடிகள் உடைப்பு! மர்ம ஆசாமியை சிசிடிவி மூலம் பிடித்த காவற்படை!

Share:

கோல திரங்கானு, அக்டோபர்.05-

கடந்த புதன்கிழமை, திரங்கானு சாலைப் போக்குவரத்துத் துறையின் வாகனத்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாயா கெலாடி வணிக மையப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் முன் கண்ணாடியும், பக்கவாட்டுக் கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தன. அந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம், ஒரு நபரைக் கைது செய்துள்ளதாக ஜேபிஜே இயக்குநர் ஸம்ரி சமியோன் உறுதிப்படுத்தினார். அரசாங்கச் சொத்துக்கு ஏற்பட்ட இந்தச் சேதத்தை ஜேபிஜே மிகவும் தீவிரமாகக் கருதுகிறது.

Related News