சிப்பாங், மார்ச்.08-
சைபர்ஜெயாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 39 வயதுடைய வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த இவரைப் பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சிப்பாங் மாவட்டக் காவற்படை சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றியதாக அதன் தலைவர், உதவி ஆணையர் நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார். தடயவியல் சோதனையில் இச்சம்பவத்தில் எவ்வித குற்றவியல் பின்னணியும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மரணம் திடீர் மரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சைபர்ஜெயா மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடத்தப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.








