லங்காவி, மார்ச்.08-
லங்காவி, தஞ்சோங் சின்சின் கடல் பகுதியில் உரிம விதிகளை மீறி 15 கடல் மைல் தொலைவிற்குள் மீன் பிடித்த இரண்டு வெளிநாட்டு மீன்பிடி படகுகளை மலேசிய கடல்சார் அமலாக்க முகமையினரான மாரிதிம் மலேசியா நேற்று மதியம் பறிமுதல் செய்தனர். இந்தச் சோதனையின் போது முறையான ஆவணங்களின்றி படகுகளை இயக்கிய 5 தாய்லாந்து நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான படகுகளும் மீன்பிடி கருவிகளும் பிடிபட்டதாக கெடா-பெர்லிஸ் மண்டலத்தின், ரோம்லி முஸ்தஃபா தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மீன்பிடி சட்டம் 1985, குடிநுழைவுச் சட்டம் 1959 - 1963 ஆகியவற்றின் கீழ் மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.








