இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகம், இனி ரூபாய் நோட்டில் நடக்கும் என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதரகம் இன்று அறிவித்துள்ளது.
அதே வேளையில், இதற்கு முன்பு இருந்த நாணயப் பரிவர்த்தனை முறையும் தொடரும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
இந்திய ரூபாய் மூலம், சர்வதேச பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்குக் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில் இந்தியாவின் மத்திய வங்கியான ரிசெவ்ட் பேங் ஒஃ இந்தியா அனுமதி வழங்கியது தொடர்ந்து, அடுத்தகட்ட முயற்சியாக இந்தியா-மலேசியா இடையிலான வர்த்தகத்தை ரூபாய் நோட்டில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மலேசியாவிற்கான இந்தியத் தூதரகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது உலகளாவிய நிலையில் இந்தியாவின் வர்த்தகங்கள் ரூபாய் நோட்டில் நடைபெறுவதை ஆதரிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளதாக இந்தியத் தூதரகம் தமது அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


