இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகம், இனி ரூபாய் நோட்டில் நடக்கும் என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதரகம் இன்று அறிவித்துள்ளது.
அதே வேளையில், இதற்கு முன்பு இருந்த நாணயப் பரிவர்த்தனை முறையும் தொடரும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
இந்திய ரூபாய் மூலம், சர்வதேச பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்குக் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில் இந்தியாவின் மத்திய வங்கியான ரிசெவ்ட் பேங் ஒஃ இந்தியா அனுமதி வழங்கியது தொடர்ந்து, அடுத்தகட்ட முயற்சியாக இந்தியா-மலேசியா இடையிலான வர்த்தகத்தை ரூபாய் நோட்டில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மலேசியாவிற்கான இந்தியத் தூதரகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது உலகளாவிய நிலையில் இந்தியாவின் வர்த்தகங்கள் ரூபாய் நோட்டில் நடைபெறுவதை ஆதரிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளதாக இந்தியத் தூதரகம் தமது அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளது.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


