இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகம், இனி ரூபாய் நோட்டில் நடக்கும் என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதரகம் இன்று அறிவித்துள்ளது.
அதே வேளையில், இதற்கு முன்பு இருந்த நாணயப் பரிவர்த்தனை முறையும் தொடரும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
இந்திய ரூபாய் மூலம், சர்வதேச பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்குக் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில் இந்தியாவின் மத்திய வங்கியான ரிசெவ்ட் பேங் ஒஃ இந்தியா அனுமதி வழங்கியது தொடர்ந்து, அடுத்தகட்ட முயற்சியாக இந்தியா-மலேசியா இடையிலான வர்த்தகத்தை ரூபாய் நோட்டில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மலேசியாவிற்கான இந்தியத் தூதரகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது உலகளாவிய நிலையில் இந்தியாவின் வர்த்தகங்கள் ரூபாய் நோட்டில் நடைபெறுவதை ஆதரிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளதாக இந்தியத் தூதரகம் தமது அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


