Jul 31, 2026
Thisaigal NewsYouTube
குழந்தையின் மரணத்திற்கு காரணமான தாய்தந்தையர் தடுத்து வைப்பு
தற்போதைய செய்திகள்

குழந்தையின் மரணத்திற்கு காரணமான தாய்தந்தையர் தடுத்து வைப்பு

Share:

கடந்த சனிக்கிழமை துங்கு அசிசா மருத்துவமனையில் உயிரிழந்த 6 வயது சிறுமியின் மரணத்திற்குக் காரணமான தாய் தந்தையரை காவல் துறை தடுத்து வைத்துள்ளது.

இது குறித்து கோலாலம்பூர் காவல் துறையின் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவிக்கையில், எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வரை அவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த இணையினருக்கு 3 வயது, 7 வயது குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் நேரவில்லை எனவும் அவர்கள் தற்போது சமூக நல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அல்லாவுதீன் அப்துல் மஜித் குறிப்பிட்டார்.

Related News