கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர், டேசா பெட்டாலிங்கில் உள்ள ஓர் உணவகத்திலிருந்து ஆடவர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு நபர்களில் ஐவர் போலீஸ்காரர்கள் என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுதீன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் உள்ளூர் வாசியான பாதிக்கப்பட்டவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஐந்து போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
27 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து போலீஸ்காரர்களும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி ஜாம் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


