கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர், டேசா பெட்டாலிங்கில் உள்ள ஓர் உணவகத்திலிருந்து ஆடவர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு நபர்களில் ஐவர் போலீஸ்காரர்கள் என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுதீன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் உள்ளூர் வாசியான பாதிக்கப்பட்டவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஐந்து போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
27 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து போலீஸ்காரர்களும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி ஜாம் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


