Jul 5, 2026
Thisaigal NewsYouTube
தந்தையால் சித்ரவதை செய்யப்பட்ட மகன் படுகாயம்
தற்போதைய செய்திகள்

தந்தையால் சித்ரவதை செய்யப்பட்ட மகன் படுகாயம்

Share:

மலாக்கா, ஜூன்.28-

சொந்த தந்தையால் சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் 11 வயது மாணவன் ஒருவர், கடும் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

மலாக்கா, பண்டார் ஹிலிரில் உள்ள தனது வீட்டில் சித்ரவதைக்கு ஆளாகிய நிலையில் அவனது தலையில் பலத்த காயங்களும், ரத்தக் கட்டுகளும் இருப்பது, தெங்கெராவில் உள்ள பள்ளி நிர்வாகம் கடந்த வியாழக்கிழமை கண்டுபிடித்தது.

பின்னர் அந்த ஐந்தாம் வகுப்பு மாணவன், உடனடியாக மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறான்.

Related News