Jul 5, 2026
Thisaigal NewsYouTube
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க எஸ்பிஆர்எம் தயாராகி வருகிறது
தற்போதைய செய்திகள்

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க எஸ்பிஆர்எம் தயாராகி வருகிறது

Share:

புத்ராஜெயா, ஜூலை.03-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புப்படுத்தப்பட்ட 17 கோடி ரிங்கிட் ரொக்கப் பணம் மற்றும் 70 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள தங்கக் கட்டிகளை அவரிடமிருந்து பறிப்பதற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தயாராகி வருவதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

17 கோடி ரொக்கப் பணமும், 16 கிலோ தங்கக் கட்டிகளும், இஸ்மாயில் சப்ரிக்கு மிக நெருக்கமான முன்னாள் அதிகாரியின் பாதுகாக்கப்பட்ட ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டவையாகும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

அந்தப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் எவ்வாறு பெறப்பட்டன என்பதற்கு முழுமையாக தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லாத நிலையில் அவற்றின் உரிமையை முன்னாள் பிரதமரிடமிருந்து பறிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

அதே வேளையில் இந்தப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் தொடர்பாக இஸ்மாயில் சப்ரியிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்து சட்டத்துறை அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இனி நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பது சட்டத்துறை அலுவலகத்தின் அனுமதியைப் பொறுத்ததாகும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி