Dec 3, 2025
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் விடுவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் விடுவிக்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

தன் வசம் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர், இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

அந்த துணை பப்ளிக் பிராசிகியூட்டருக்கு எதிராக 3 நாள் தடுப்புக் காவல் காலக்கெடு, முடிவடைந்தைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டதாக புத்ராஜெயா போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முகமட் தெரிவித்தார்.

அந்த எஸ்பிஆர்எம் அதிகாரிக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்க விசாரணை அறிக்கை, பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் வைத்திருந்தததாகச் சந்தேகத்தின் பேரில் அந்த அதிகாரியை கடந்த செவ்வாய்க்கிழமை அவரின் வீட்டில் போலீசார் கைது செய்தனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்