எல்.ஆர்.டி ரயிலில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 43 வயது வெளிநாட்டவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி, கோலாலம்பூர், வங்சா மாஜூ நிலையத்திலிருந்து பசார் செனி நோக்கி பயணித்த 25 வயது பெண்ணின் முதுகுப் பகுதியில், சந்தேக நபர் வேண்டுமென்றே உரசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்தப் பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பின்னர் பசார் செனி எல்.ஆர்.டி நிலையத்தில் பிரசாரானா துணை போலீசார் சந்தேக நபரை கைது செய்து, அம்பாங் ஜெயா மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனர்.
விசாரணைக்கு உதவுவதற்காக அந்த நபர் ஆகஸ்ட் 25 வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.








