பகாங், ஜன - 10
தாமான் பெருமாஹான் பன்டார் பாரு வில் வங்காளதேச ஆடவரை தாக்கிய குற்றத்திற்காக மூன்று மணி நேரத்திற்குள் 21 வயதுடைய இளைஞன் உட்பட அவரின் 17 வயதுடைய காதலியும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு 11:30 மணியளவில் சந்தேகிக்கும் ஆண் 40 வயதுடைய பங்லாடேஷி கடையின் மேற்பாளரை கூர்மையான ஆயுதத்தால் காயப்படுத்தி 6,750 வெள்ளியுடன் தப்பித்து சென்றதாக தெரியவந்துள்ளது.
கடையின் முன்னாள் பணியாளரான அப்பெண், பாதிக்கப்பட்ட நபரை வீட்டிற்கு வெளியே சந்திக்க முற்பட்ட போது இச்சம்பவம் நடந்ததாக லிப்பிஸ் போலீஸ் தலைவர் சுபெரிதென்டன் அஸ்லி முஹமாட் நோர்கூறினார்.
கடையின் உரிமையாளர் அளித்த புகாரை தொடர்ந்து அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டதாக அஸ்லி முஹமாட் தெரிவித்தார்.








