அமைச்சர் வி.சிவக்குமார் தலைமையிலான மனித வள அமைச்சின் புதிய தலைமை செயலாளராக டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸைனி உஜாங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் நியமனத்தை அரசாங்க தலைமை செயலாளர் டான் ஶ்ரீ முகமட் சுகி அலி இன்று அறிவித்துள்ளார்.
58 வயதான ஸைனி உஜாங் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், ரசாயன பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார்.
பிரிடனில், நியூ காஸ்தல் பல்கலைக்கழகத்தில் பொறியியல், சுற்றுச்சூழல் துறையில் பட்டம் பெற்றவர் ஆவார்.|
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1988 ஆம் ஆண்டு தமது பணியைத் தொடங்கிய ஸைனி உஜாங், 2011 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி, தூதரக நிர்வாகத் துறையில் உயர் பொறுப்பை ஏற்கத்தொடங்கினார்.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


