Jul 5, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் 1,020 மாணவர்கள் விரக்தியின் விளிம்பில்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் 1,020 மாணவர்கள் விரக்தியின் விளிம்பில்

Share:

ஷா ஆலாம், ஜூலை.07-

சிலாங்கூர் மாநிலத்தில் 1,020 மாணவர்கள் விரக்தியின் விளிம்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

யாரிடமும் பழகாமல் தனிமையைத் தேர்வு செய்து, விரக்தியுடன் அந்த மாணவர்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ள இந்த 1,020 மாணவர்களின் பாதுகாப்பு, இடருக்கு உரியது என்றும், அவர்களுக்கு மன நல சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில பள்ளிகளில் சந்தேகத்திற்கு இடமாக அடையாளம் காணப்பட்ட 36 ஆயிரத்து 428 மாணவர்களுக்குச் சுகாதாரப் பரிசோதனை நடத்தப்பட்டதில் 1,020 மாணவர்கள் அல்லது 2.8 விழுக்காடு மாணவர்கள் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டு, விரக்தியின் விளிம்பில் இருப்பது தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது