May 24, 2026
Thisaigal NewsYouTube
எல்லைத் தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராட்டம்
தற்போதைய செய்திகள்

எல்லைத் தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராட்டம்

Share:

லியான்யுங்காங், செப்டம்பர் 10-

எல்லைத் தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு மலேசியாவுடனான இரு தரப்பு ஒத்துழைப்பில் சீனா தனது உயர் நிலை அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இன்று சீனா, ஜியாங்சு -வில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான லியான்யுங்காங் உலகளாவிய பொது பாதுகாப்பு ஒத்துழைப்பு மன்றத்தின் ஆய்வரங்கையொட்டி, சீனாவின்
பொது பாதுகாப்பு அமைச்சர் Wang Xiaohong- குடன் நடத்தப்பட்ட சந்தப்புக்கு பின்னர் அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பலதரப்பட்ட முக்கிய விஷயங்களை தாங்கள் பேசியதுடன் எல்லைத்தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News