Mar 29, 2026
Thisaigal NewsYouTube
கேமரன்மலை கடை வாடகை திடீர் உயர்வா? விசாரணை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

கேமரன்மலை கடை வாடகை திடீர் உயர்வா? விசாரணை நடத்தப்படும்

Share:

குவாந்தன்,அக்டோபர் 08-

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான கேமரன்மலையில் மேடன் அக்ரோ பகுதியில் உள்ள கடைகளின் வாடகை, 7,500 வெள்ளி வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் புகார் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிம் சோன் சியாங் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் தாமும் நிறைய புகார்களை கடந்த வாரம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வணிகர்களிடம் தாங்கள் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கடையின் வாடகையும் 500 வெள்ளியிலிருந்து 5 ஆயிரம் வெள்ளி வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக வணிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர் என்று அவர் விவரித்தார்.

தற்போது வியாபாரம் செய்து வரும் வணிகர்களை விரட்டும் நோக்கில் கேமரன்மலை மாவட்ட ஊராட்சி மன்றம் வேண்டுமென்றே கடை வாடகையை உயர்த்தியுள்ளதாக காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத் தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி