May 25, 2026
Thisaigal NewsYouTube
கேமரன்மலை கடை வாடகை திடீர் உயர்வா? விசாரணை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

கேமரன்மலை கடை வாடகை திடீர் உயர்வா? விசாரணை நடத்தப்படும்

Share:

குவாந்தன்,அக்டோபர் 08-

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான கேமரன்மலையில் மேடன் அக்ரோ பகுதியில் உள்ள கடைகளின் வாடகை, 7,500 வெள்ளி வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் புகார் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிம் சோன் சியாங் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் தாமும் நிறைய புகார்களை கடந்த வாரம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வணிகர்களிடம் தாங்கள் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கடையின் வாடகையும் 500 வெள்ளியிலிருந்து 5 ஆயிரம் வெள்ளி வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக வணிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர் என்று அவர் விவரித்தார்.

தற்போது வியாபாரம் செய்து வரும் வணிகர்களை விரட்டும் நோக்கில் கேமரன்மலை மாவட்ட ஊராட்சி மன்றம் வேண்டுமென்றே கடை வாடகையை உயர்த்தியுள்ளதாக காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத் தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி