May 21, 2026
Thisaigal NewsYouTube
வீடு புகுந்து திருடும் கும்பலை போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து திருடும் கும்பலை போலீசார் கைது

Share:

ஷா அலாம்,ஜன.10
சிலாங்கூர், ஜோகூர் ஆகிய இடத்திலுள்ள ஆடம்பர வீடுகளில் புகுந்து திருடும் கும்பலில் மூளையாக செயல்படும் உள்ளூர் பெண் உட்பட 5 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

45 க்கும் 62 க்கும் வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் ஐந்து வெவ்வேறு இடங்களில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி வளைத்து பிடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையின் அதிகாரி டத்தோ ஶ்ரீ முஹமாட் ஷுஹைலி முஹமாட் சேய்ன் தெரிவித்தார்.

55 வயதுடைய அப்பெண் இரண்டு கொலொம்பியா பிரஜைகளுடன் நாட்டிற்குள் சுற்றுப்பயண விசாவுடன் நுழைந்த போது இந்நடவடிக்கை தொடங்கப்பட்டதாக முஹமாட் ஷுஹைலி கூறினார்.

விசாரணையில் விலை உயர்ந்த கைப்பைகள், அணிகலன்கள், கடிகாரங்கள், ஓட்டுநர் உரிமம் அட்டை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் அந்நபர்களின் மீது விசாரணை மேற்கொள்ளபட்டு வருவதாக முஹமாட் ஷுஹைலி விவரித்தார்.

Related News

வீடு புகுந்து திருடும் கும்பலை போலீசார் கைது | Thisaigal News