காஜாங், ஆகஸ்ட் 05-
பிரத வண்டி ஒன்றை துரத்திச் சென்று ,அதன் ஓட்டுநரை தாக்குவதற்கு மக்கள் முயற்சித்தது, திருட்டுச் சம்பவம் அல்ல என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் விளக்கம் அளித்துள்ளார்
நேற்று ஞாயிற்றுக்கிழமை காஜாங்-கில் ஒரு வீடமைப்புப்பகுதியில் , அந்த பிரெத வண்டி மெதுவாக சென்றது , அந்த பிரெத வண்டியை பழுதுபார்ப்பதற்காக கொடுக்கப்பட்ட மெக்கானிக்கின் தவறான முகவரியின் காரணமாக அவரின் வீட்டை தேடுவதற்கு 35 வயதுடைய ஓட்டுநர் , வாகனத்தை மெதுவாக செலுத்தியிருக்கிறார்.
ஆனால் , பிரெதம் ஏதும் இல்லாமல் சந்தேகத்திற்கு இடமாக அந்த பிரெத வண்டி, அந்த வீடமைப்புப் பகுதிக்குள் இரண்டு , மூன்று முறை வலம் வருவதைக் கண்ட மக்கள், அதனை பிந்தொடர்ந்து செனறு, ஓட்டுநரை தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர் என்று ஏசிபி நாஸ்ரோஹ் விளக்கம் அளித்தார்.
பிரெத வண்டியை பயன்படுத்தி ,எந்த திருட்ச்சம்பவமும் அப்பகுதியில் நிகழ்வில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தவறான புரிதல் காரணமாக நேற்று மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அவர் மேலும் தெளிவுப் படுத்தினர்.








