கடந்த வாரம் 24 வயது பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில், 36 வயது பி-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவருக்கு எதிராக இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மது போதையில் இருந்ததாக கூறப்படும் ஏ. வினோத்வர்மா என்ற அந்த ஓட்டுநர், கடந்த மே 22-ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில், சிகை அலங்காரப் பணியாளரான அஷா பேகம் என்ற பெண்ணிடம், தான் வாங்கித் தந்த பரிசுக்கான பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு வசைபாடியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் ஃபரா நபீஹா டான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட வினோத்வர்மா, தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விாசரணை கோரினார்.
வினோத்வர்மா தாயாரின் உடல்நிலை மற்றும் தந்தையின் மாற்றுத்திறனைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அவருக்கு 4 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது.








