மலேசியாவின் சிறைச்சாலை அமைப்பில் உடனடியாக பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் இயக்கமான ஹகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2025 ஜனவரியில், தைப்பிங் சிறையில் நடந்த வன்முறையில் ஒரு கைதி உயிரிழந்தார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்தனர். இது குறித்து சுஹாகம் நடத்திய பொது விசாரணை அறிக்கை, கைதிகள் நடத்தப்படும் விதம் மற்றும் சிறைச்சாலைகளின் மோசமான நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அது பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து ஹாகாம் தலைவர் டத்தோஸ்ரீ எம். ராமச்செல்வம் கூறுகையில், சிறைவாசம் என்பது ஒருவரின் அடிப்படை மனித கண்ணியத்தை இழப்பதாக அர்த்தமாகாது என்றார்.
சிறைகளில் உள்ள நெரிசல் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் கவலையளிப்பதாகக் கூறிய அவர், ஐநா-வின் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையை மலேசியா அங்கீகரிக்க வேண்டும் என்றும், சிறை அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.








