May 27, 2026
Thisaigal NewsYouTube
பத்து லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

பத்து லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை நடத்தப்படும்

Share:

கோலாலம்பூர், டிச.24-


வங்கிகளில் ATM இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்படும் ஒரு ரிங்கிட் சேவைக்கட்டணத்தை அரசாங்ஙகம் அகற்ற வேண்டும் என்று கோரி நாடு தழுவிய நிலையில் பத்து லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் வேட்டையை தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான என்.யூ.பி.இ. தொடங்கியுள்ளது.

தானியங்கி பட்டுவாடா இயந்திரத்தில் சேவைக்கட்டணமாக ஒரு ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுவது சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கச் செய்கிறது. இந்த கட்டண முறை,முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்று என்.யூ.பி.இ. யின் பொதுச் செயலாளர் ஜே.சோலமன் வலியுறுத்தியுள்ளார்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்.யூ.பி.இ. முன்னெடுத்துள்ள பிரச்சாரங்களில் இந்த ஒரு ரிங்கிட் கட்டண முறையை அகற்றுவதும் அடங்கும். இதற்கு பொது மக்களின் ஆதரவை பெறுவதற்கு பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டு இந்த கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக சோலமன் விளக்கினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு