கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூரின் அரச மலேசிய கடற்படையின் தொண்டூழிய வீரர்களுக்கான கெளரவ முதல் தளபதி எனும் உயரிய விருது பறிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் பரிந்துரை செய்துள்ளார்.
மேன்தை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாஹ்வை அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கெடா மந்திரி பெசார் சனூசியின் கெளரவ தளபதி விருது மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று சைபுடீன் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அரச மலேசிய கடற்படையின் தொண்டூழிய வீரர்களுக்கான கெளரவ தளபதி விருது சனூசிக்கு வழங்கப்பட்டது. அரச மலேசிய கடற்படையின் தலைவராக கேப்டன் அந்தஸ்தில் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்கு எதிராக தேச நிந்தனை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கெடா மந்திரி புசார் சனூசி அந்த உயரிய பொறுப்பு வகிப்பது இனியும் பொருந்தாது என்று சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


