கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூரின் அரச மலேசிய கடற்படையின் தொண்டூழிய வீரர்களுக்கான கெளரவ முதல் தளபதி எனும் உயரிய விருது பறிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் பரிந்துரை செய்துள்ளார்.
மேன்தை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாஹ்வை அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கெடா மந்திரி பெசார் சனூசியின் கெளரவ தளபதி விருது மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று சைபுடீன் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அரச மலேசிய கடற்படையின் தொண்டூழிய வீரர்களுக்கான கெளரவ தளபதி விருது சனூசிக்கு வழங்கப்பட்டது. அரச மலேசிய கடற்படையின் தலைவராக கேப்டன் அந்தஸ்தில் சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்கு எதிராக தேச நிந்தனை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கெடா மந்திரி புசார் சனூசி அந்த உயரிய பொறுப்பு வகிப்பது இனியும் பொருந்தாது என்று சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


