Apr 19, 2026
Thisaigal NewsYouTube
 மெர்டேக்கா தின கொண்டாட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் : இருவர் விடுதலை
தற்போதைய செய்திகள்

மெர்டேக்கா தின கொண்டாட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் : இருவர் விடுதலை

Share:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெர்டேக்கா தினக் கொண்டாட்டத்தின் போது, போதைப்பொருளை கடத்தியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த இருவரை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

37 வயது வர்த்தகரான என். சுரேஷ் மற்றும் 49 வயது முடித்திருத்துபவரான ஆர். நாகராஜன் ஆகிய இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கோலாலம்பூர், சிகாம்புட், ஜாலான் உடாங் ஹரிமாவ்வில் உள்ள ஒரு வீட்டில் 315.58 கிராம் மெத்தாம்பெட்டமைன்யும், 22.5 கிராம் ஹெராயினையும் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

இருப்பினும், சுரேசும், நாகராஜனும் கடத்தியதாக கூறப்படும் போதைப்பொருட்கள் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்ததை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிபதி நூர் ருவேனா நூர்தின் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். ரெவின் குமார், தனது கட்சிக்காரர்கள் அந்த வீட்டின் குடியிருப்பாளர்கள் அல்ல என்றும், சம்பவத்தன்று கழிவறையைப் பயன்படுத்தவே அந்த வீட்டிற்கு சென்றதாகவும் வாதிட்டார்.

இந்த வழக்கில் நேரடி தொடர்புடைய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த ஏ. கிருஷ்ணன் என்பவர், விசாரணை தொடங்கும் முன்பே காவலில் இருந்தபோது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!