Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு

Share:

புத்ராஜெயா, மே 14-

மலேசியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மலேசிய புள்ளி விவர இலாகா அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மலேசியாவின் மக்கள் தொகை 2.3 விழுக்காடு அதிகரித்து, 3 கோடியே 40 லட்சம் பேராக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 3 கோடியே 32 லட்சமாக இருந்துள்ளது என்று மலேசிய புள்ளி விவர இலாகா கூறுகிறது.

புதிய எண்ணிக்கையில் மலாய்க்காரர்கள் 58 விழுக்காடாகவும், சீனர்கள் 22.6 விழுக்காடாகவும், இந்தியர்கள் 6.6 விழுக்காடாகவும், இதர இனத்தைச் சேர்ந்த பூமிபுத்ராக்கள் 4.4 விழுக்காடாகவும், ஈபானியர் 2.4 விழுக்காடாகவும், கடாசான் டுசுன் 2.1 விழுக்காடாகவும், இதர இனத்தவர்கள் மிக சிறிய விழுக்காடாகவும் உள்ளனர் என்று அவ்விலாகா தெரிவித்துள்ளது.

புதிய எண்ணிக்கையில் 3 கோடியே 60 லட்சம் பேர் மலேசியப் பிரஜைகள் என்றும் 34 லட்சம் பேர் அந்நிய நாட்டவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட புதிய புள்ளி விவரத்தின்படி இதே காலக்கட்டத்தில் அந்நிய நாட்டவர்களின் எண்ணிக்கையும் 6 லட்சம் உயர்ந்துள்ளதாக அவ்விலாகா தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து