நேற்று மாலை 6.30 மணி அளவில் கூலிம் கரங்கான் - பாலிங் சாலையில் இனோக்கோம் தொழிற்சாலையின் அருகாமைகில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் 30 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவம் இடத்திலே உயிர்யிழந்திருப்பத்தாக கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டென்டன் ஷம்சுல் பின் சின்ரிங் தெரிவித்தார்.
இந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய மோதிய வாகனம் சம்பவம் இடத்திலிருந்துத் தப்பி ஓடி விட்டத்தாக ஷம்சும் தெரிவித்தார். அவ்வாகனத்தின் பதிவு எண், வாகனம் ரகத்தை அறிந்தவர்கள் அல்லது இவ்விபத்தை பார்த்தவர்கள் உடனடியாக அருகாமையில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் தகவல் வழங்கும்படி ஷம்சுல் பின் சிங்ரிங் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, இந்த விபத்தில் கிடைக்கப்பெற்ற ஒரு சில சாட்களின் தகவல்படி மோட்டார் சைக்கிளை மோதி சென்ற வாகனம் முன்புறம் மஞ்சள் நிறமும், பின்புறம் நீல நிறத்திலும் கொண்ட ஒரு மோட்டோடெய்லர் இருக்கலாம் என்ற நம்பப்படுக்கின்றது. இருந்தப்போதிலும் , இன்னும் முழுமையான தகவல் தெரிவந்தவர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் கூறலாம் என்றார்.இதுவரை அந்த வாகனத்தின் ஓட்டுநரால் இச்சாலை விபத்தின் தொடர்பாக எவ்விதமான போலீஸ் புகார்களும் பெறவில்லை.
ஆகவே, சாலை விபத்தில் உயிர் இழந்தவர் ஒரு தொழிற்சாலையில் பணி புரிபவர் என்று விசாரணையில் தெரிய வந்தன.இவ்வழக்குச் சாலை போக்குவரத்து சட்டம் 1987, பிரிவு 41(1)-ன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றார் சூப்ரிண்டென்டன் ஷம்சுல் பின் சிங்ரின். அதுடன் தகவல் வழங்கும் நினைப்பவர்கள் வழக்கு விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் நூர்செட்டி அதாவியா பிந்தி முஹம்மத் அவர்களை 011-33982365 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுக்கின்றனர்.











