Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வாருக்கு எதிராகப் பதவியிறக்கச் சொல்லும் பேரணியில் ஈடுபட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வாருக்கு எதிராகப் பதவியிறக்கச் சொல்லும் பேரணியில் ஈடுபட வேண்டாம்

Share:

புத்ராஜெயா, ஜூலை.20-

வரும் ஜுலை 26 ஆம் தேதி கோலாலம்பூர் மாநகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள துருன் அன்வார் பேரணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவார்களேயானால், அவர்களின் செயல் ருக்குன் நெகாராவின் கோட்பாட்டிற்கு முரணானதாகும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷம்சூல் அஸ்ரி அபு பக்கார் வலியுறுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்கள் எப்போதுமே மாமன்னருக்கும், அரசாங்கக் கொள்கைக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

அரசுப் பணியை ஏற்பதற்கு முன்பு, எத்தகைய நிலையிலும் மாமன்னருக்கும், நாட்டிற்கும் விசுவாசமாக இருப்போம் என்ற சத்தியப் பிரமாணம் செய்த பின்னரே தங்கள் பொறுப்பை ஏற்கின்றனர்.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் இது போன்ற பேரணியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தாம் ஆலோசனை கூறுவதாக ஷம்சூல் அஸ்ரி நினைவுறுத்தியுள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது