May 26, 2026
Thisaigal NewsYouTube
மழைக்காலத்தில் தீயணைப்பு – மீட்புப் படையினரின் விடுமுறைக்குத் தடை
தற்போதைய செய்திகள்

மழைக்காலத்தில் தீயணைப்பு – மீட்புப் படையினரின் விடுமுறைக்குத் தடை

Share:

நவ. 24-

தென் கிழக்கு மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, மலேசியத் தீயணைப்பு மீட்புப் படையின் ஐந்து மாநிலங்களில் உள்ள ஏறத்தாழ 6000 ஊழியர்கள் விடுமுறைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திரங்கானு, கிளாந்தான், பகாங், ஜோகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 27 , 28, டிசம்பர் 15, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மலேசியத் தீயணைப்பு – மீட்புப் படையின் தலைமை இயக்குநர் Datuk Nor Hisham Mohammad தெரிவித்தார்.

இந்த மாநிலங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் 20 விழுக்காடு ஊழியர்களின் விடுமுறைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மீதமுள்ள ஊழியர்களின் விடுமுறைக்கும் தடை விதிக்கப்படும் என்றார்.

வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள தயாராக இருக்க, தீயணைப்பு – மீட்புப் படை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில், அவசரகால குழுக்களை உருவாக்குதல், அவசியமான கருவிகளைத் தயார் செய்தல் போன்றவயும் அடங்கும் என Nor Hisham குறிப்பிட்டார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு