Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சிகரெட் புகைத்ததால் உணவகத்தில் சண்டை
தற்போதைய செய்திகள்

சிகரெட் புகைத்ததால் உணவகத்தில் சண்டை

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.15-

உணவகத்தில் நிகழ்ந்த சண்டை தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உணவகத்தில் புகை பிடிக்கக்கூடாது என கூறியதால் கோபமடைந்த நபர் ஒருவர் கர்ப்பிணி மனைவியுடன் அமர்ந்திருந்த ஆடவருடன் சண்டையிட்டுள்ளார் என்று ஷாஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் ஷா ஆலாம், செக்‌ஷன் 13 உள்ள பிரபல உணவகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு 11.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக அந்த தம்பதியரிடமிருந்து போலீசார் புகார் ஒன்றைப் பெற்றுள்ளனர். சண்டை தொடர்பான காணொளி, சமூக ஊடகங்களில் மறுநாள் மதியம் 1.45 மணிக்குப் பரவியது.

இச்சண்டை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக ஏசிபி முகமட் இக்பால் மேலும் கூறினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்