Apr 7, 2026
Thisaigal NewsYouTube
மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து

Share:

மோசடி குற்றங்களை தடுக்கும் வகையில் கடுமையான தண்டனைகளை விதிக்க குற்றவியல் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் செய்ய வேண்டும் என பெர்சாத்து கட்சியின் இணை பிரிவு இடைக்காலத் தலைவர் ஆர். ஸ்ரீ சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

மோசடி தொடர்பான வழக்குகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் குற்றவியல் சட்டப்பிரிவு 420, தற்போதைய டிஜிட்டல் மோசடிகள் மற்றும் இணைய குற்றங்களுக்கு தெளிவான மற்றும் முழுமையான வரையறைகளை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், மலேசியர்கள் மோசடி கும்பல்களுக்குப் பலியாகி, தங்கள் வாழ்நாள் சேமிப்பு, எதிர்காலம் மற்றும் நிறுவன அமைப்புகளின் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது, இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

ஜோகூரில் பெர்ஹிலிடிான் நடத்திய அதிரடிச் சோதனை: 36.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வனவிலக்கு உடல் பாகங்கள் பறிமுதல்

ஜோகூரில் பெர்ஹிலிடிான் நடத்திய அதிரடிச் சோதனை: 36.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வனவிலக்கு உடல் பாகங்கள் பறிமுதல்

சொத்து விவரங்களை மறைத்த வழக்கு: டாயிம் மகள் அசனிடா விசாரணை கோரினார்

சொத்து விவரங்களை மறைத்த வழக்கு: டாயிம் மகள் அசனிடா விசாரணை கோரினார்

பவுலிங் மையத்தில் பபூட்டிய அறையில் ஊழியர் சடலமாகக் காணப்பட்டார்

பவுலிங் மையத்தில் பபூட்டிய அறையில் ஊழியர் சடலமாகக் காணப்பட்டார்

"முழுமையான வெளிப்படையான விசாரணை வேண்டும்" - நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் கோரிக்கை

"முழுமையான வெளிப்படையான விசாரணை வேண்டும்" - நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் கோரிக்கை