பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் இனவாரியாகத்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேவையாற்ற வேண்டும் என்பதல்ல என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், டிஏபி பேரா மாநில உதவித் தலைவருமான அ. சிவநேசன் கருத்துரைத்துள்ளார்.
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் மற்றும் தமிழ்ப்பள்ளி விவகாரம் ஆகியவற்றுக்கு பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி பொறுப்பேற்று இருந்தார். தற்போது அப்பொறுப்புகள் இரண்டாவது துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜக்டிப் சிங் டியோவிடம் ஒப்படைக்கப்படுமா? என்ற கேள்வி அர்த்தமில்லாதது என்று சிவநேசன் தெரிவித்துள்ளார்.
யாரிடம் அப்பொறுப்புகளை ஒப்படைப்பது என்ற முடிவைக் கட்சியின் தலைமையும், மாநில அரசும் முடிவு செய்யும் என்ற சிவநேசன் குறிப்பிட்டார். முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் இராமசாமி பினாங்கு மாநில கல்விப் பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தார். அப்போது மாநிலத்தின் பெரும்பான்மை இனத்தவர்களான சீனர்களோ, மலாய்க்காரர்களோ சீனப் பள்ளிகளுக்கும், மலாய்ப் பள்ளிகளுக்கும் ஒரு தமிழர் எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என்று கேள்வி எழுப்பவில்லை. எனவே இனவாரியாகத்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேவையாற்ற வேண்டும் என்பது அல்ல என்று ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சிவநேசன் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


