Jul 2, 2026
Thisaigal NewsYouTube
தைப்பிங்கில் திடீர் வெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!
தற்போதைய செய்திகள்

தைப்பிங்கில் திடீர் வெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

Share:

ஈப்போ, அக்டோபர்.04-

தைப்பிங்கில் நேற்று பெய்த கனமழையினால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், சுமார் 210 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாமான் காயா பல்நோக்கு மண்டபம், எஸ்கே சிம்பாங், எஸ்கே மாத்தாங் மற்றும் எஸ்கே மாத்தாங் கெலுகோர் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம், தாமான் பெங்காலான் மக்மோர், தாமான் பெங்காலான் செத்தியா உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள வீடுகளில் புகுந்ததால், அப்பகுதி மக்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், இன்று அக்டோபர் 4-ஆம் தேதி, உலு பேராக், கோல கங்சார் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

தைப்பிங்கில் திடீர் வெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் பாதுக... | Thisaigal News