நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, புதிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பாஸ் கட்சித் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் சபா, சரவாக் மாநில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்த பின்னரே ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜூன் மாதம் வரை போதிய கால அவகாசம் இருப்பதால், தற்போது கட்சி சார்ந்த உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாகும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.








