நாடு தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி அடையவும், முதலீட்டை அதிகரிக்கவும், தீவிர வறுமையை ஒழிக்கவும் அனைத்து மக்களின் ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.
இம்முறை கொண்டாடப்படும் கிறிஸ்துஸ் பண்டிகையானது, சமூகப் பின்னணியில் வேறுபாடு இல்லாமல் மக்கள் மத்தியில் எப்போதும் அன்பாகவும், நற்குணத்தைப் பரப்பவும் ஓர் உந்துதலாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை, கடந்த ஆண்டுகளைப் போல் எப்போதும் அன்பையும் சுபிட்சத்தையும் வர வேண்டும் எனவுமனைத்து கிறுஸ்துவ அன்பர்களுக்கும் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் அவர் கூறினார்.








