Sep 6, 2026
Thisaigal NewsYouTube
எரிமலை சாம்பல் காரணமாக ஜகார்த்தா செல்லும் ஏர் ஏசியா விமானச் சேவைகள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

எரிமலை சாம்பல் காரணமாக ஜகார்த்தா செல்லும் ஏர் ஏசியா விமானச் சேவைகள் பாதிப்பு

Share:

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள Soekarno-Hatta அனைத்துலக விமான நிலையத்தில் எரிமலைச் சாம்பல் காரணமாக, அந்நாட்டு நேரப்படி, இன்று காலை 9.30 மணி வரை விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதனால் ஜகார்த்தாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் ஏர் ஏசியாவின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், சில விமானங்களின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மவுண்ட் அனாக் கிராகாதாவ் என்ற எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து விமானப் பாதைகளில் எரிமலைச் சாம்பல் பரவியதால், விமானப் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஏர் ஏசியா தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்படக்கூடிய விமானச் சேவைகளில் தேவையான செயல்பாட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அவர்களின் விமானங்களின் நிலை மற்றும் அடுத்தகட்ட பயணத்திற்கான மாற்று வாய்ப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாக ஏர் ஏசியா அறிவித்துள்ளது.

Related News

சகிப்புத்தன்மைக்கான சவாலில் பங்கேற்ற யுஐடிஎம் (UiTM) மாணவர் உயிரிழப்பு - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

சகிப்புத்தன்மைக்கான சவாலில் பங்கேற்ற யுஐடிஎம் (UiTM) மாணவர் உயிரிழப்பு - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஜோகூரில் தொலைக்காட்சி சத்தம் அதிகமாக வைத்த மனைவியை வெட்டிய கணவன்

ஜோகூரில் தொலைக்காட்சி சத்தம் அதிகமாக வைத்த மனைவியை வெட்டிய கணவன்

“விவசாயிகளை பலிகடா ஆக்கக்கூடாது!” – உர விநியோக தாமதம் குறித்து எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அன்வார் உத்தரவு

“விவசாயிகளை பலிகடா ஆக்கக்கூடாது!” – உர விநியோக தாமதம் குறித்து எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அன்வார் உத்தரவு

நேபாளத்தில் மீட்புப் பணிக்கு மலேசிய தன்னார்வக் குழு களமிறங்கியது

நேபாளத்தில் மீட்புப் பணிக்கு மலேசிய தன்னார்வக் குழு களமிறங்கியது

குழந்தைகள் சுவாசிக்கும் காற்றே புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கலாம் – பேராக் சுல்தான்

குழந்தைகள் சுவாசிக்கும் காற்றே புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கலாம் – பேராக் சுல்தான்

என்கேவிஇ கட்டமைப்பு இடிந்து விழுந்தது: முக்கிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்புத் தணிக்கை கோரிக்கை

என்கேவிஇ கட்டமைப்பு இடிந்து விழுந்தது: முக்கிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்புத் தணிக்கை கோரிக்கை