Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுடைமைத் திட்டம் மேம்படுத்தப்படும்: பிரதமர் உறுதி

Share:

கோல சிலாங்கூர், பிப்.15-

நாடு முழுவதும் உள்ள தோட்டங்களில் வேலை செய்து வருகின்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் நல்லதொரு வீட்டு வசதியைப் பெற்றிட, PRR என சுருங்க அழைக்கப்படும் Program Residensi Rakyat மக்கள் வீட்டுடைமைத் திட்டத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெரிய தோட்டங்களை நிர்வகித்து வரும் தோட்ட உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு விட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்ற தோட்டத்திலேயே ஒரு நிலப்பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அங்கு வேலை செய்து வருகின்ற அனைத்து குடும்பங்களுக்கு PRR எனும் Program Residensi Rakyat வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு வழிவிடப்பட வேண்டும் என்று தோட்ட உரிமையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

கோலசிலாங்கூர், பத்தாங் பெர்ஜுந்தை, Bestari Jaya-வில் இன்று PRR Harmoni Madani Bestari Jaya என்ற அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பெரிய, பெரிய தோட்டங்களில் அதிகமான இந்தியர்கள் தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுமைத் திட்டத்திற்கு பெரிய பெரிய தோட்ட நிர்வாகங்கள் பத்து ஏக்கர் அல்லது 20 ஏக்கர் நிலப்பரப்பில் இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என்பதில்லை. மாறாக, ஒரு வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்படும் அளவிற்கு ஒரு சிறு நிலப்பகுதியை ஒதுக்கித் தந்தாலேயே போதுமானதாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பெரிய தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

இந்த PPR Harmoni Madani Bestari Jaya வீடமைப்புத் திட்டத்திற்கு அரசாங்கம் 75 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்து இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங்கும் கலந்து கொண்டார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்