Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா கடற்பகுதியில் 50 டன் டீசலுடன் வந்த கப்பல் பிடிப்பு
தற்போதைய செய்திகள்

மலாக்கா கடற்பகுதியில் 50 டன் டீசலுடன் வந்த கப்பல் பிடிப்பு

Share:

மலாக்கா, பிப்ரவரி.08-

பூலாவ் மலாக்காவுக்கு அருகே, உரிய ஆவணங்களின்றி 50 மெட்ரிக் டன் டீசல் ஏற்றி வந்த ஒரு கப்பலை மலேசிய கடலோர காவற்படை நேற்று மாலை பறிமுதல் செய்தது. சுமார் 180 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான அந்த டீசலை வாங்கியதற்கான இரசீதுகளோ அல்லது துறைமுக அனுமதியோ அந்தக் கப்பலின் மாலுமியிடம் இல்லை என்பது சோதனையில் தெரிய வந்ததாக மலாக்கா - நெகிரி செம்பிலான் கடலோர காவற்படை இயக்குநர் கேப்டன் மாரிதிம் சலேஹுடின் ஸாகாரியா தெரிவித்தார்.

சட்டத்திற்குப் புறம்பான டீசல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, கப்பலில் இருந்த 21 முதல் 62 வயதுக்குட்பட்ட ஐந்து இந்தோனேசிய ஊழியர்களும் பிடிபட்டனர். கட்டுப்படுத்தப்பட்ட பொருளை அனுமதியின்றி வைத்திருந்தது, விதிமுறைகளை மீறியது போன்ற குற்றங்களுக்காகச் சுங்கச் சட்டம், விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு