பிரபல போலீஸ் நாடகத் தொடரில் நடித்த பிரபல மலேசிய நடிகை ஒருவர், மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் துறை நடத்திய திடீர் சோதனையின் போது, அந்த நடிகையுடன் சேர்த்து மேலும் 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை டாங் ங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சசாலி ஆடம் உறுதிப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








