ஜோகூர் மாநிலத் தேர்தலையொட்டி போக்குவரத்து சேவைகளுக்கான தேவை அதிகரித்திருப்பது, வாக்காளர்களின் அதிகப்படியான பங்கேற்பைக் காட்டும் ஒரு நல்ல அறிகுறியாகும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
மின்சார ரயில் சேவைக்கான இடிஎஸ் அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்ட வேளையில், வெளிவட்டார வாக்காளர்கள் ஜோகூர் திரும்புவதற்குப் பேருந்து நிறுவனங்கள் சிறப்புச் சலுகைகளை வழங்கி வருகின்றன.
வரும் ஜுலை 11 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல் வாக்குப்பதிவில் பங்கேற்க வெளியூரில் வாழும் ஜோகூர் மக்கள் அனைவரும் மாநிலத்திற்கு திரும்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தேர்தல் குறித்த தவறான தகவல்கள் பரவுவதைக் கண்காணிக்கப் போவதாகவும், 2027 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்படவுள்ள சிங்கப்பூர் - ஜோகூர் பாரு ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில் 4G மற்றும் 5G இணையக் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய எம்.சி.எம்.சி-க்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் டத்தோ ஃபஹ்மி குறிப்பிட்டார்.








