May 15, 2026
Thisaigal NewsYouTube
வெளி முறைமை மாணவர்களுக்கும் ஐபிடிஏ கல்வி உதவித்தொகை
தற்போதைய செய்திகள்

வெளி முறைமை மாணவர்களுக்கும் ஐபிடிஏ கல்வி உதவித்தொகை

Share:

தேசிய கல்வி முறைமைக்கு வெளியில் பயின்ற மாணவர்கள் சிறப்புப் பாதையின் மூலம் பொது உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படும்போது, மற்ற மாணவர்களைப் போலவே அவர்களுக்கும் அரசாங்கத்தின் கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்று உயர் கல்வித் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் அஸ்லிந்தா அஸ்மான் தெரிவித்துள்ளார். இம்மாற்றங்கள் அனைத்தும் வரும் ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

இவர்கள் முதன்மைப் பாதையின் மூலமாகவே கல்வியைத் தொடர்வார்கள் என்பதால், வணிக ரீதியிலான கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சீனத் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தஹ்ஃபிஸ் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவது முறையல்ல என்று டாக்டர் அனுவார் அகமது கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், கல்வி வாய்ப்பை உள்ளடக்கியதாக மாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்லிந்தா குறிப்பிட்டார்.

Related News