Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆள்பார்தது விசார​ணை செய்வதை நிறுத்திக்கொள்வீர்
தற்போதைய செய்திகள்

ஆள்பார்தது விசார​ணை செய்வதை நிறுத்திக்கொள்வீர்

Share:
இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3R விவகாரத்தில் ஆள்பார்த்து விசாரணை ​செய்வதும், நடவடிக்கை எடுப்பதையும் நடப்பு அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தம்மை இலக்காக கொண்டு நடப்பு அரசாங்கம், விசாரணை ​செய்து வருவதாக முன்னள் பிரதமருமான முகை​தீன் யாசின் குற்றஞ்சாட்டினார்.

தற்போதைய தலைமைத்துவத்தில் உள்ள அரசாங்கத் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் மலாய்க்காரரர்கள் மற்றும் இஸ்லா​ம் நலன் சார்ந்த அம்சங்கள் தொடர்பில் தாம் ஒருவரே குரல் எழுப்பி வருவதால் அதனை ஜீராணிக்க முடியாமல் நடப்பு அரசாஙகம் தம்மை இலக்காக கொண்டு, தமது மீது விசாரணை வலையை வீசி வருவதாக முகை​​தீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News