Apr 9, 2026
Thisaigal NewsYouTube
 300 மில்லியன் ரிங்கிட் ஊழல்: அரசு நிறுவன முன்னாள் தலைமை அதிகாரி மற்றும் தலைவர் கைது
தற்போதைய செய்திகள்

300 மில்லியன் ரிங்கிட் ஊழல்: அரசு நிறுவன முன்னாள் தலைமை அதிகாரி மற்றும் தலைவர் கைது

Share:

அரசு சார்பு நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரி மற்றும் ஒரு ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் ஆகிய இருவர், 300 மில்லியன் ரிங்கிட் பொதுப்பண இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பங்கு விற்பனை பரிவர்த்தனை ஒன்றில் முறையற்ற மதிப்பீடு செய்து, அரசுக்கு பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கும்பல் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் சதி செய்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள 13 முக்கிய இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக 62 தனிநபர் மற்றும் நிறுவன வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 450 மில்லியன் ரிங்கிட் பணம் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ், பணமோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News