இவ்வழக்கில், துணை அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தோ முகமட் நோர்டின் இஸ்மாயில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு, 10,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை முன்மொழிந்தார்.
இவ்விவகாரத்தில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி வரையில் சுமார் 100 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவை பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
இதனையடுத்து, சம்ரி சார்பில் அவரது வழக்கறிஞர் முஹம்மது ஹாரிஸ் முகமட் யூசோப், பிணைத் தொகையை குறைக்கும் படி கோரிக்கை வைத்ததோடு, குற்றஞ்சாட்டப்பட்டவர் தன்னார்வமாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், சம்ரி தாய்லாந்துக்கு தப்பிச் செல்லவில்லை என்றும், மார்ச் 9 முதல் 12 வரை திருமண ஏற்பாடுகளுக்காக மட்டுமே அங்கு சென்றிருந்தார் என்றும், அது ஐஜிபியின் ஊடக அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே நடந்தது என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நீதிபதி ஃபைசாநூர் 4,500 ரிங்கிட் பிணையுடன் ஒரு நபரின் உத்தரவாதத்துடன் பிணை வழங்கி அடுத்த விசாரணையை ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு நிர்ணயித்தார்.








