May 16, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் பெண்ணிடம் 6 லட்சம் ரிங்கிட் மோசடி
தற்போதைய செய்திகள்

பினாங்கில் பெண்ணிடம் 6 லட்சம் ரிங்கிட் மோசடி

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.01-

பினாங்கில் காப்புறுதி குமாஸ்தாவாகப் பணி புரியும் 61 வயது மாது ஒருவர் தொலைப்பேசி உரையாடல் வழி ஸ்கேம் மோசடியில் சிக்கி 6 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார்.

வங்கி அலுவலர் போல் நாடகமாடிய மோசடிப் பேர்வழிகள், அம்மாதுவின் பெயரில் கடன் அட்டை இருப்பதாகக் கூறி அவரை ஏமாற்றியுள்ளனர்.

அம்மாதுவைத் தொலைப்பேசியில் அழைத்து, 14 முறை நடைபெற்ற பணப் பரிமாற்றம் மூலம், 6 லட்சம் ரிங்கிட்டிற்கும் கூடுதலாக மோசடி செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாது, பின்னர் தனது மகளிடம் இவ்விவகாரத்தைக் கூறிய பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News