சுங்கை பகப், ஜூலை 6-
இன்று நடைபெற்று வரும் சுங்கைப் பாக்காப் இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு கடைசி நேரம் வரையில் காத்திருக்க வேண்டாம் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ், தொகுதி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
தற்போது வானிலை நன்றாக இருப்பதால் தொகுதி வாக்காளர்கள் விரைந்து வந்து, தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும்படி அவர் வலியுறுத்தினார்.
மிக பரபரப்பாக நடைபெற்று வரும் சுங்கைப் பாக்காப் இடைத் தேர்தல் வாக்களிப்பு நிலவரத்தை இன்று காலையில் நேரில் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சௌ கோன் இயோவ் மேற்கண்ட அறைகூவலை விடுத்துள்ளார்.








