5 வயது சிறுவன் சித்திரவதைச் செய்யப்பட்டு மரணம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அந்த சிறுவனின் தாயார் மற்றும் அவரின் காதலன் ஆகியோருக்கு எதிரான தடுப்புக்காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ அன்பழகன் தெரிவித்தார்.
அந்த மாதுவும் அவரின் காதலனும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைச் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வாகனம் மோதி கடும் காயங்களுக்கு ஆளானதாக நாடகமாடி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த 5 வயது சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆடவர் மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகினார்.
எனினும், போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் அச்சிறுவனின் 44 வயது தாயாரும் அவரின் 29 வயது காதலனும் கைது செய்யப்பட்டதாக ஏ.ஏ அன்பழகன் குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


