5 வயது சிறுவன் சித்திரவதைச் செய்யப்பட்டு மரணம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அந்த சிறுவனின் தாயார் மற்றும் அவரின் காதலன் ஆகியோருக்கு எதிரான தடுப்புக்காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ அன்பழகன் தெரிவித்தார்.
அந்த மாதுவும் அவரின் காதலனும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைச் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வாகனம் மோதி கடும் காயங்களுக்கு ஆளானதாக நாடகமாடி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த 5 வயது சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆடவர் மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகினார்.
எனினும், போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் அச்சிறுவனின் 44 வயது தாயாரும் அவரின் 29 வயது காதலனும் கைது செய்யப்பட்டதாக ஏ.ஏ அன்பழகன் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


