5 வயது சிறுவன் சித்திரவதைச் செய்யப்பட்டு மரணம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அந்த சிறுவனின் தாயார் மற்றும் அவரின் காதலன் ஆகியோருக்கு எதிரான தடுப்புக்காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ அன்பழகன் தெரிவித்தார்.
அந்த மாதுவும் அவரின் காதலனும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைச் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வாகனம் மோதி கடும் காயங்களுக்கு ஆளானதாக நாடகமாடி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த 5 வயது சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆடவர் மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகினார்.
எனினும், போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் அச்சிறுவனின் 44 வயது தாயாரும் அவரின் 29 வயது காதலனும் கைது செய்யப்பட்டதாக ஏ.ஏ அன்பழகன் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


